என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதியவர் தூக்கிட்டு தற்கொலை
- உடல் நிலை பாதிப்பால் அவதி
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன் (வயது 67). இவர் அதே ஊரில் கூலி வேலை செய்து வந்தார். சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள மரத்தில் வேட்டியால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த சிறப்பு தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் இன்பரசன் ஆகியோர் முத்கைதையன் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






