search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கோட்டை அகழியில் ஆண் பிணம் மீட்பு
    X

    வேலூர் கோட்டை அகழியில் ஆண் பிணம் மீட்பு

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கோட்டை பின்புறம் அகழியில் இன்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக மிதந்தவர் யார் என்பது தெரியவில்லை. வெள்ளை நிற சட்டை நீல நிற பேண்ட் அணிந்திருந்தார். அவரது உடலில் எந்தவிதமான அடையாளங்களும் இல்லை.

    அவர் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    வேலூரில் யாராவது மாயமாகி உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் இன்று காலை கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×