என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி வைக்க தடை
    X

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி வைக்க தடை

    • பெண் போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பு
    • போலீசார் கடும் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 31-ந் தேதி இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடவும் அமைதியாக கொண்டாடும் பொருட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் நிலையங்கள் ரெயில் நிலையங்கள் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் கூடுதலாக ஆன் மற்றும் பெண் காவலர்கள் சீருடைகளும் சாதாரண உடைகளிலும் நியமிக்கப்படுவார்கள் இப்பனிக்காக வேலூர் மாவட்டத்தில் 1200 போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர்.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து ஒளி பெருக்கிகள் வைக்க கூடாது. மேலும் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட யாருக்கும் அனுமதி கிடையாது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .இதனை உறுதி செய்யவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மொத்தம் 60 இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் 244 சக்கர ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.

    கேளிக்கை விடுதிகளில் இரவு நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சட்டத்திற்கு உட்பட்டு விதிமீறல்கள் இன்றி நடத்தப்பட வேண்டும்.

    மாவட்டத்திலுள்ள சுங்கச்சாவடிகள் காவல் சோதனைச் சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்து மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    அதிவேகமாகவும் மோட்டார் பந்தயத்தில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற அத்துமீறல்களை தவிர்க்க மாவட்டத்தில் 58 தடுப்புகள் அமைத்து வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் அவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேலை வாய்ப்பு பெற காவல்துறை மூலமாக நன்னடத்தைச் சான்றிதழ் பெற பரிந்துரை செய்ய இயலாது.

    காவல்துறையினரின் அறிவுரைகளை கடைப்பி டித்து அசம்பாவிதம் இல்லாத மற்றும் விபத்து இல்லாத புத்தாண்டை கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×