என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
    X

    கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

    • குடும்ப தகராறில் விரக்தி
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த அன்பூண்டி கிராமத்தை சேர்ந்த வினோத் (32) இவர் லாரி பாடிபில்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் இருந்துள்ளார். கனவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

    இதனால் மனமுடைந்த வினோத் தனது படுக்கறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். வெகு நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர் அப்போது அங்கு வினோத் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு சென்று உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×