search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தகராறில் மோதல்
    X

    குடும்ப தகராறில் மோதல்

    • 5 பேர் படுகாயம்
    • 4 பேர் கைது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த ஏரிபட்டரை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன்கள் குமாரசாமி, வெங்கடேசன், வடிவேலு உள்ளிட்டோர் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஆடி மாதம் ஆடு வெட்டி சாமி கும்பிட்டுள்ளனர். அந்த விழாவின்போது குமாரசாமி வெட்டிய ஆட்டின் கறியை அண்ணன் தம்பிகள் மற்றும் உறவினர்களுக்கு பங்கிட்டு கொடுத்துள்ளனர்.

    ஆட்டுக்கறி பங்கிட்டு கொடுத்ததில் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அண்ணன் தம்பிகளுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 11-ந் தேதி இரவு இது சம்பந்தமாக மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் இரவு மீண்டும் மோதல் ஏற்பட்டு அண்ணன் தம்பிகள் 2 குழுக்களாக பிரிந்து தடி கத்தி உள்ளிட்டவைகளை கொண்டு சரமாரியாக தாக்கி கொண்டுள்ளனர்.

    இதில் குமாரசாமி (வயது 50). அவரது மகள் ரேவதி (25) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அதே போல் வடிவேலு (43), அவரது மனைவி சுப்புலட்சுமி (33), வடிவேலுவின் தாயார் கிளியம்மாள்(86) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    காயமடைந்த இரு தரப்பினரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் (46) அவரது மகன் சதன்ராஜ்(22) ஆகியோரை கைது செய்தனர் அதேபோல் குமாரசாமி மகன்கள் வயது 17 வயது மற்றும் 16 வயதில் இருவரையும் இந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் கைது செய்தனர்.

    குடியாத்தம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிக்குள் மோதல் ஏற்பட்டு 5 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×