என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாட்டு கொட்டகையில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
வேலூர்:
வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே உள்ள கேசவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 55).விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வந்தார். இதற்காக வீட்டு அருகிலேயே இரும்பு கம்பி மற்றும் தகரங்களால் ஆன கொட்டகை அமைத்துள்ளார்.
நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்றுடன்மழை பெய்தது. அப்போது மின்கம்பி அறுந்து அவரது மாட்டு கொட்டகையில் விழுந்தது. இதில் மாட்டு கொட்டகை இரும்பு தகடு மற்றும் கம்பி தூண்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.
முருகேசன் மாலை 6.30 மணிக்கு மாடுகளை கட்டுவதற்காக கொட்டகைக்கு சென்றார். அங்குள்ள இரும்பு கம்பியை தொட்ட போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் உறைந்து போன முருகேசன் அப்படியே சுயநினைவு இழந்து கம்பியை பிடித்தவாறு நின்றார். முருகேசன் கம்பியை பிடித்துக் கொண்டு சாதாரணமாக நிற்கிறார் என அவரது மனைவி நினைத்துக் கொண்டார்.
நீண்ட நேரம் அவர் அப்படியே நின்றதால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி முருகேசன் அருகே சென்று அவரை தொட்டார். அப்போதுதான் கணவர் மீது மின்சாரம் பாய்ந்தது அவருக்கு தெரியவந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முருகேசனை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போதுதான் கம்பியை பிடித்தபடியே முருகேசனின் உயிர் பிரிந்தது தெரியவந்தது.
இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்