search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு
    X

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஆட்டோ டிரைவர்கள்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு

    • வேலூர் பழைய பஸ் நிலையத்தில் திருவள்ளுவர் சிலை அருகே ஆட்டோக்கள் நிறுத்த அனுமதி கேட்டனர்.
    • 130-க்கும்மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள்.

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே ஆட்டோக்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்தனர். அந்த இடத்தில் ஆட்டோக்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி வேலூர் வடக்கு போலீஸ் சார்பில் ஆட்டோக்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது. அங்கிருந்த ஆட்டோ களையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

    அதில் நாங்கள் பழைய பஸ் நிலைய பகுதியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் ஆட்டோ ஓட்டி வருகிறோம். திடீரென வடக்கு போலீசார் அந்த இடத்தில் ஆட்டோவை நிறுத்த கூடாது என கூறிவிட்டனர்.

    இதுபற்றி கேட்டதற்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் ஆட்டோக்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறினர். இதனால் சுமார் 130-க்கும்மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள்.

    பழைய பஸ் நிலையத்தில் திருவள்ளூர் சிலை அருகே ஆட்டோ நிறுத்த அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    இதுதொடர்பாக அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர். அப்போது அவர் திருவள்ளுவர் சிலை அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் 5 ஆட்டோக்கள் என்ற அடிப்படையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல அனுமதி அளித்ததாக தெரிவித்தனர்.

    Next Story
    ×