search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா‌.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

    பா‌.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க கோரி கோஷம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் குமார் வரவேற்று பேசினார்.

    முன்னாள் அமைச்சர் என்.டி.சண்முகம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் பொய்கை வெங்கடேசன், லத்தேரி வெங்கடேசன், இளைஞரணி செயலாளர் ஜெகன், துணைத் தலைவர் சம்பத், துணை செயலாளர்கள் இளங்கோவன், கோபி, துளசிராமன், மாநில மகளிர் அணி செயலாளர் வரலட்சுமி, மாவட்ட வன்னியர் சங்க துணை தலைவர் சுரேஷ்கோபி, சுரேஷ், சமூக நீதிப் பேரவை சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க கோரி கோஷம் எழுப்பினர்.

    Next Story
    ×