search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
    X

    பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு

    • 2 கோவில்கள் துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த புலிமேடு மலையடிவாரத்தில் உள்ள வல்லாண்டப்பன் கோவிலில் மர்ம கும்பல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோவை திறந்து அதில் வைத்திருந்த உண்டியல் பணம் ரூ.25 ஆயிரத்தை திருடி சென்றனர். இதேபோல் வல்லாண்டப்பன் கோவில் அருகே உள்ள தஞ்சியம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள உண்டியலையும் உடைத்து அதிலிருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தையும் திருடிச் சென்றனர்.

    இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள் அரியூர் போலீசில் புகார் செய்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    மேலும் திருட்டு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×