என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்குகள் மோதி 2 பேர் பலி
    X

    கோப்புப்படம்

    பைக்குகள் மோதி 2 பேர் பலி

    • பைக்குகள் நேருக்கு நேர் மோதியது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 23) ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் கணியம்பாடி சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கனி கனியான் கிராமம் அருகே வந்தபோது எதிரே மேற்கு கொல்லைமேடு பகுதியை சேர்ந்த கார்பெண்டர் உதயகுமார் (35) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    எதிர்பாராத விதமாக இருவரது பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜய் மற்றும் உதயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×