என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பைக் மீது பஸ் மோதி விபத்து
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் துர்க்கை நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (21) இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் அரவிந்தன், ராஜலிங்கம் இருவரும் குடியாத்தம் ெரயில் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றனர்.
அங்கு பெட்ரோல் போட்டு கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்துள்ளனர். வேலூரில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த அரசு பஸ் குடியாத்தம் ெரயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது. இதில் ராஜலிங்கமும், அரவிந்தனும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக ராஜலிங்கம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்