search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மீது பஸ் மோதி விபத்து
    X

    பைக் மீது பஸ் மோதி விபத்து

    • 2 வாலிபர்கள் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் துர்க்கை நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (21) இருவரும் நண்பர்கள்.

    இந்நிலையில் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் அரவிந்தன், ராஜலிங்கம் இருவரும் குடியாத்தம் ெரயில் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றனர்.

    அங்கு பெட்ரோல் போட்டு கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்துள்ளனர். வேலூரில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த அரசு பஸ் குடியாத்தம் ெரயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது. இதில் ராஜலிங்கமும், அரவிந்தனும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக ராஜலிங்கம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×