என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி
- சேற்றில் சிக்கிய சக்கரத்தை மீட்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு டவுன் தரைக்காடு பகுதி, அல்லி மஜித் தெருவை சேர்ந்தவர் மெகபூப் பாஷா, கூலி தொழிலாளி. இவரது மகன் அப்துல்ரஹ்மான் (வயது 17), இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி தெருவில் உள்ள ஒரு இரும்பு வெல்டிங் ஒர்க் ஷாப்பில் தொழிலா ளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலை யில் நேற்று காலை லோடு ஆட்டோவில் இரும்பு சட்டங்களை ஏற்றி கொண்டு அப் துல்ரஹ்மான் ஆட்டோவை ஓட்டி சென்றார். வீ.கோட்டா ரோடு தனியார் பள்ளி பின்புறம் அருகில் உள்ள ஒரு குடோனுக்கு சென்றபோது ஆட்டோவின் பின் சக்கரம் சேற்றில் சிக்கியது.
இதனையறிந்த அப்துல்ரஹ்மான் இறங்கி சென்று சேற்றில் சிக்கிய ஆட்டோவை தள்ள முயன்றார். திடீரென ஆட்டோ கவிழ்ந்தது. அப்போது இரும்பு சட்டங்கள் அவர் மீது விழுந்ததால் இடிபாடு களில் சிக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சென்று அப்துல் ரஹ்மான் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்