என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 குழந்தைகளை தவிக்க விட்டு ஆட்டோ டிரைவர் மனைவி தற்கொலை
- கணவரின் மது பழக்கத்தால் விபரீதம்
- உதவி கலெக்டர் விசாரணை
வேலூர்:
காட்பாடி கழிஞ்சூர் காந்தி தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்.ஆட்டோ டிரைவர் இவருடைய மனைவி லட்சுமி (வயது 26) தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
உறவினர்களான இருவருக்கும் பெற்றோர்கள் நிச்சயம் செய்து திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.
ராஜேஷ் மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் போதையில் வீட்டிற்கு வரும் அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
நேற்று இரவு கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த லட்சுமி வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
கணவரின் மது போதையால் லட்சுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது குழந்தைகள் தாயை இழந்து தவித்து வருகின்றனர்.






