என் மலர்
உள்ளூர் செய்திகள்

எல்லை பாதுகாப்புப்படை வீரர் மனைவியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது
- தகராறு கைகலப்பாக மாறியது
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்து கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வர் ரங்கநாதன் இவருக்கு முனிரத்தினம் (வயது 49), அண்ணாதுரை (32) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முனிரத்தினம் ஸ்ரீபுரம் பகுதியில் வேலை செய்து வருகின்றார். அண்ணா துரை எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அண்ணாதுரை மனைவி கீதாவிடம், குடும்பச் செலவிற்காக முனிரத்தினம் 5 பவுன் நகையை வாங்கி அடகு வைத்துள்ளார். அடகு வைத்து மூன்று ஆண்டுகளாகியும் நகையை திருப்பி தராததால் விடுமுறையில் வந்த அண்ணாதுரை, அண்ணன் முனிரத்தினத்திடம் இது குறித்து கேட்டுள்ளார்.
இதில் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இந்த நிலையில் கணவரை தாக் குவதை தடுக்க வந்த கீதாவை மண்வெட்டியால் தலைப்பகு தியில் முனிரத்தினம் தாக்கியுள்ளார். இதில் பலத்தகாயம டைந்த கீதா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கீதா பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முனிரத்தினத்தை கைது செய்தனர்.






