என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம
- 15 பிரிவுகளின் கீழ் விருது
- கலெக்டர் அறிவிப்பு
வேலூர்:
தமிழ்நாடு சுற்றுலாத்துறை தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இந்த ஆண்டு விருது வழங்குவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் வருகின்ற 26- ந் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உலக சுற்றுலா தினமான 2-ந்தேதி அன்று வழங்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Next Story






