search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ சதீஷ்குமார் உள்பட பிரமுகர்கள் உள்ளனர்.

    வேலூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்தது
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

    வேலூர்:

    அ.தி.மு.க., சார்பில், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலை வாசி உயர்வு உள்ளிட்ட தி.மு.க., அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ சதீஷ்குமார், சி‌கே.சிவாஜி, தாஸ், பி.எஸ் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அணைக்கட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி தலைவர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் பாபுஜி, ஆனந்தன், நகர செயலாளர்கள் கோவிந்தன், ஜோதி குமார், உமாபதி உட்பட ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×