என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குப்பையில் தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தல்
- புகை மூட்டத்தால் விபத்து ஏற்படும் அபாயம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பள்ளிகொண்டா பேரூராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளில் தரம் பிரிக்கப்பட்டு மக்காத குப்பைகளை தேசிய நெடுஞ்சாலை அருகே கொட்டப்பட்டு வருகிறது.
அவ்வாறு கொட்டப்படும் மக்காத குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது அப்புறப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சில நேரங்களில் சமூக விரோத கும்பல்கள் தேக்கி வைக்கப்படும் குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விட்டு செல்கின்றனர்.
அவ்வாறு தீமூட்டும் போது ஏற்படும் புகை மூட்டமானது அருகில் உள்ள சென்னை, பெங்களூர் நெடுஞ்சாலையில் சூழ்ந்து போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக ஏற்படுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் என அச்சமும் நிலவி வருகிறது. மேலும் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் சென்று துர்நாற்றம் வீசுகின்றது.
எனவே இப்பகுதியில் தீயிட்டுக் கொளுத்தும் சமூக விரோத கும்பலை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்