search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை
    X

    காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை

    • திருமணமான 2 ஆண்டில் பரிதாபம்
    • தாய் இல்லாமல் குழந்தை கதறல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ெரயில் நிலையம் அருகே உள்ள பரசுராமன்பட்டி வைஷ்ணவி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் மருத்துவ பிரதிநிதியாக உள்ளார்.

    இவரது மனைவி இளவரசி (வயது 24). 2 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இன்று அதிகாலையில் வீட்டில் இளவரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து சென்ற டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் - இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் இளவரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் ஆகி 2 ஆண்டுகள் மட்டும் ஆவதால் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தி வருகிறார்.

    காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது.

    அவரது ஆண் குழந்தை தாயைக் காணாது அழுதபடி இருப்பது காண்போரின் மனதை கலங்கச் செய்தது.

    Next Story
    ×