வேலைக்கு சென்ற வாலிபர் மாயம்

மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் போலீசார் தேடி வருகின்றனர்
வேலைக்கு சென்ற வாலிபர் மாயம்
Published on

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அருகே வேலைக்கு செல்வதாக கூறிசென்ற இளைஞர் ஒரு மாதமாக காணவில்லை கண்டுபிடித்து தரவேண்டும் என போலீஸ் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.

ஒடுகத்தூர் அருகே உள்ள கீழ்கொத்தூர், தண்டையான்கோட்டை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியானவர் விஜய் (வயது 24). இவருக்கு திருமணமாகி தேவையானி (22) என்ற மனைவி உள்ளார். கடந்த நவம்பர் மாதம் 10-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார். சென்ற அடுத்த நாள் முதல் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டள்ளது.

மேலும் இவரை பற்றி அக்கம் பக்கம் உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை அவரை கண்டுபிடித்து தர வேண்டுமென வேப்பங்குப்பம் போலீசாரிடம் தேவையானி நேற்று புகார் கொடுத்தார்.

இதன் சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து கானாமல் போன அவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com