search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் மோதி வாலிபர் சாவு
    X

    ரெயில் மோதி வாலிபர் சாவு

    • ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர், தொரப்பாடி, ஜீவா நகரை சேர்ந்தவர் வைரமுடி. இவரது மகன் பாபு. இவர் நேற்று இரவு கணியம்பாடி ரெயில் நிலையம் அருகே வந்தார். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த வழியாக வந்த ரெயில் பாபு மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட பாபு படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×