என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு
- 4 கிலோ மீட்டர் தூரம் உடல் இழுத்து வரப்பட்டது
- பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
வேலூர்:
சென்னையில் இருந்து மங்களூரு நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு சேவூர் பகு தியை தாண்டி வந்து கொண் டிருந்தது.
வாலிபர் சாவு
அப்போது ரெயி லில் சுமார் 30 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் அடிப் பட்டு இறந்தார் . அவரது உடல் ரெயில் என்ஜினில் மாட்டிக்கொண்டது. இதையறிந்த ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை நிறுத்தி உடலை மீட்க முயன்றனர்.
இரவு நேரம் என்பதாலும், உடலை மீட்க முடியாததாலும் அந்த முயற்சியை கைவிட்டனர். பின்னர் ரெயிலை காட் பாடி ரெயில் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இத னால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் என்ஜின் முன்பு சிக்கிய உடலுடன் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது.
பயணிகள் அதிர்ச்சி
அப்போது ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் என் ஜின் முன்னால் உடல் இருந் ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள் சிலர் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது. இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத் துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் காட்பாடியில் இருந்து 20 நிமிடங்கள் தாமதமாகரெயில் மங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்