search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழக்கடை வியாபாரிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்
    X

    கருத்து கேட்பு கூட்டம் நடந்த காட்சி.

    பழக்கடை வியாபாரிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

    • போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் லாங்கு பஜாரில் கடை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல்
    • மாற்று இடம் குறித்து ஆலோசனை

    வேலூர்:

    வேலூர் லாங்கு பஜாரில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அங்குள்ள வியாபாரிகளுக்கு பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    இருப்பினும் அங்கு போதிய அளவு கடை அமைக்க வில்லை, மின்சார வசதி இல்லை சமூக விரோதிகளின் தொல்லை உள்ளிட்டவைகளால் அங்கு கடைகளை நடத்த முடியாமல் மீண்டும் லாங்கு பஜாரில் கடை நடத்தி வருகின்றனர். இதனால் போலீசார் லாங்கு பஜாரில் உள்ள பழக்கடைகளை அப்புறப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் லாங்கு பஜாரில் உள்ள சண்முகனடியார் சங்கத்தில் பழ வியாபாரிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    இதையடுத்து லாங்கு பஜாரில் பழக்கடையை வேறு எங்கு மாற்றம் செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×