search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெனரேட்டர் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது
    X

    ஜெனரேட்டர் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து ஜெனரேட்டர் ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்னை துறைமுகத்திற்கு சென்று கொண்டு இருந்தது.

    வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் வந்தபோது கலெக்டர் அலுவலகம் அருகே பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

    லாரியில் இருந்த ஜெனரேட்டர் கீழே விழுந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்து கிரேன் மூலம் லாரி மற்றும் ஜெனரேட்டரை மீட்டு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×