search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணுவ வீரர் கொலையில் 5 பேர் கைது
    X

    ராணுவ வீரர் கொலையில் 5 பேர் கைது

    • கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டினர்
    • வேலூர் ஜெயிலில் அடைக்கபட்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மேல் வல்லம் அருகே உள்ள சந்தன கொட்டா கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 47) முன்னாள் ராணுவ வீரர்.

    நேற்று மாலை கண்ணமங்கலம் செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி அருகே நின்றிருந்த பூங்காவனத்தை தேடி 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர்.

    அவர்கள் அருகே கிடந்த மூங்கில் குச்சிகளை எடுத்து பூங்காவனத்தின் தலையில் தாக்கினர். தப்பி ஓடிய பூங்காவனத்தை விரட்டிச் சென்று அடித்தனர். அவர் கீழே விழுந்தபோதும் தாக்கியுள்ளனர்.

    இதில் பூங்காவனம் சம்பவ இடத்திலேயே இறந்தார். வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பூங்காவனத்திற்கும் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (56) என்பவரது மனைவிக்கும் கள்ள தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சண்முகத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது சண்முகம் மற்றும் அவரது உறவினர்கள் அண்ணாதுரை (56) ராஜசேகர் (31) ஜெகதீஷ் (30) ஜெயவேல் (57) ஆகியோர் சேர்ந்து பூங்காவனத்தை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான 5 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கபட்டனர்.

    Next Story
    ×