search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 4,000 போலீசார் கண்காணிப்பு
    X

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 4,000 போலீசார் கண்காணிப்பு

    • ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை
    • குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு

    வேலூர்:

    குடியரசு தினத்தையொட்டி வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேலூர் கோட்டை கொத்தளம் மற்றும் நேதாஜி விளையாட்டு அரங்கில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார்.

    இதனையொட்டி மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உட்பட 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு 6 இடங்களில் மாநில எல்லை சோதனை சாவடிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் 58 இடங்களில் வாகன தணிக்கையும், அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் தணிக்கை மேற்கொள்ள போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களான வேலூர் கோட்டை, மத வழிப்பாட்டு தலங்கள், காட்பாடி ரெயில் நிலைய சநத்திப்பு, குடியாத்தம் ரெயில் நிலையம், வேலூர் புதிய பஸ் நிலையம், வேலூர் பழைய பஸ் நிலையம், குடியாத்தம் புதிய பஸ் நிலையம், குடியாத்தம் பழைய பஸ் நிலையம்

    Next Story
    ×