என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒரு மாதத்தில் 4 பேர் மின்சாரம் தாக்கி பலி
- நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
- பள்ளிகொண்டாவில் விவசாயிகளை ஏமாற்றி வீடுகள் நிலங்களை பறித்துள்ளனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
விவசாய கூட்டத்துக்கு அணைக்கட்டு தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் பொன்முருகன், தலைமையிடத்து துணை தாசில்தார் குமார், வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
விவசாயிகளுக்காக நடத்தப்படும் ஜமாபந்தி விழாவில் அரசிய ல்வாதிகள் தலையிட்டால் விவசாயிகள் புறக்கணிக்க ப்படுகிறார்கள். எனவே, இந்த ஆண்டு நடைபெறும் ஜமாபந்தி விழாவில் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
அனைத்து தாலுகாவிலும் மழை மானியம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அணைக்கட்டு தாலுகாவில் மழை மானியம் இல்லாததால் விவசாயிகள் எந்த அளவிற்கு மழை பெய்தது, எந்த அளவில் பாதிப்ப டைந்துள்ளது என தெரியாமல் உள்ளனர். ஆகவே அணைக்கட்டு தாலுகாவில் மலைப்பகுதியில் மழை மானியம் வைக்க வேண்டும்.
பட்டா நிலத்தில் செங்கல் சூளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். 6 மாதகாலமாக அனுமதி கேட்டு விவசாயிகள் தாலுகா அலுவலகம் வந்து செல்வது வேதனை அளிக்கிறது. அணைக்கட்டு தாலுகாவில் ஒரே மாதத்தில் 4 பேர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
பள்ளிகொண்டாவில் விவசாயிகளை ஏமாற்றி வீடுகள் நிலங்களை பறித்துள்ளனர். அதற்க்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலைப்பகுதிகளில் முள் இல்லா மூங்கில் மரங்களை வளர்க்க வேண்டும். அப்போதுதான் வனவி லங்குகள் பாதிப்படையாமல் அங்கேயே இருக்கும் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க உதவும், மேலும் நாட்டு ரக காளைகளின்
சினை ஊசிகளை கால்நடை மருத்துவர்கள் கிராம பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
அதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கை களுக்கு அதிகாரிகள் பதிலளித்து பேசினர். கூட்டத்தில் சில துறை அதிகாரிகள் மட்டுமே கலந்துக்கொண்டு இருந்தனர். பல துறை அதிகாரிகள் வராமல் இருந்ததால் அங்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காமளே இருந்தது. எனவே அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்துக்கு அணைத்து துறை அதிகா ரிகள் கலந்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்