search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் கொலையில் 3 பேரிடம் விசாரனை
    X

    இளம்பெண் கொலையில் 3 பேரிடம் விசாரனை

    • 5 கி.மீ தூரம் டோலி கட்டி தூக்கி வந்தனர்
    • ஓய்வூதியம் பெறுவதற்காக சென்ற நிலையில் விபரீதம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த அல்லேரிமலை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மலர் (வயது 25).

    குமார் கடந்த 4 வருடத்திற்கு முன்பாக சிலரால் பட்டாசு உடல்முழுவதும் சுற்றி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து மலர் தனது 5 வயது மகனை வைத்துக்கொண்டு, கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு விதவை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த 17-ந் தேதி ஓய்வூதியம் பெறுவதற்காக மலைப்பகுதியில் இருந்து அணைக்கட்டு பகுதிக்கு சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் கூறிவிட்டு செனறுள்ளார்.

    இதன் பின்னர் நேற்று காலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

    அல்லேரி மலைப்பாதையில் கால்நடைகளை மேய்க்கும் ஒருவர் ஒரு புதரில் தலை நசுங்கிய நிலையில் பெண் சடலம் இருப்பதாக அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்தது யார் என விசாரித்ததில் மலர் என தெரியவந்தது. அவரின் உறவி னர்களுக்கு தகவல் கொ டுக்கப்பட்டு உடலை மலைப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ தூரம் டோலி கட்டி தூக்கி வந்தனர்.

    மலையடிவாரத்தில் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் மர்ம நபர்கள் யாரோ தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×