என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் 3 ஏரிகள் நிரம்பியது
- தண்ணீரில் மலர் தூவி எம்.எல்.ஏ. வரவேற்பு
- மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிரம்பி உள்ளது.
அணைக்கு வரும் தண்ணீர் அதிகரித்து உள்ளதால் மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஜிட்டப்பல்லி செக்டேமிலிருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் வழியாக குடியாத்தம் மற்றும் கே.வி. குப்பம் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
ஏரிகளுக்கு கால்வாய்கள் மூலம் செல்லும் தண்ணீர் தொடர்ந்து சென்றதால் குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 3 ஏரிகள் நிரம்பியது.
முழுவதும் வறண்டு இருந்த அக்ராவரம் ஏரி மோர்தானா கால்வாய் கிடு கிடுவென நிரம்பி நேற்று காலையில் வழிந்து ஓடியது சுமார் 63 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த அக்ராவரம் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து வருவதை தொடர்ந்து குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பூஜை செய்து பூக்கள் தூவி தண்ணீரை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன், ஒன்றிய குழு உறுப்பினர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி, துணைத்தலைவர் தமிழரசிஇளையராஜா உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
இதேபோல் சுமார் 30 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரும்பாடி ஏரியும் நேற்று நிரம்பி வழிந்தது. இதேபோல் 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட எர்த்தாங்கல் ஏரி நிரம்பி வழிவதற்கு சிறிது உயரமே இருந்தது.
இந்நிலையில் தொடர்ந்து மோர் தானா கால்வாய் வழியாக வரும் தண்ணீரும் மழை தண்ணீரும் ஏரிக்கு வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக எர்த்தாங்கல் ஏரியும் சிறிதளவு வழிந்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் ஒன்றியத்தில் 3 ஏரிகள் நிரம்பி வழிந்து வருவதால் விவசாயிகளும் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் ஏரியிலிருந்து வழிந்து ஓடும் தண்ணீர் முறையாக வெளியேற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் ஏரிக்கு வரும் கால்வாய்களும் ஏரியிலிருந்து வெளியேறும் கால்வாய்களும் ஆக்கிரமிப்பு இல்லாமல் சீர் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்