என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீட்டில் பதுக்கிய 3 நாட்டு துப்பாக்கி, கஞ்சா பறிமுதல்
ஒடுகத்தூர்:
ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லைமேடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யப்படு வதாக நேற்று வேப்பங்குப்பம் போலீசா ருக்கும் ஒடுகத்தூர் வனத்து றையினருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கொல்லைமேடு மலை கிராமத்தில் வீடுவீடாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முதியவர் ஒருவர் அதிகாரிகளை பார்த்தவுடன் தப்பியோட முயன்றார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் அதே கிராமத்தை சேர்ந்த சின்னசாமி(வயது 58), என்பதும், இவர் வீட்டில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரது வீட்டை போலீசார் சோதனை செய்த போது வீட்டின் பின்புறம் சுமார் 2 கிலோ கஞ்சா மற்றும் 3 நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தார்.
இதையடுத்து, சின்னசாமியை கைது செய்த போலீசார் அவர் வைத்து இருந்த கஞ்சா மற்றும் நாட்டுத்துப்பாக்கி களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதே பகுதியில் கடந்த மாதம் மிளகாய் நிலத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்ந்து வந்த 2 பேரை எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் கஞ்சா செடிகளுடன் கைது செய்ய ப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்