search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் என கூறி வாலிபரிடம் பைக், செல்போன், பணம் பறிப்பு
    X

    போலீஸ் என கூறி வாலிபரிடம் பைக், செல்போன், பணம் பறிப்பு

    • 3 பேர் கைது
    • சி.சி.டி.வி. கேமரா மூலம் போலீசார் மடக்கி பிடித்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு கணக்கர் தெருவை சேர்ந்தவர் பிரதீப்குமார் இவரது மகன் காமேஷ் (வயது 23). இவர் பால்வண்டி டிரைவராக உள்ளார்.

    காமேஷ் கடந்த செவ்வாய்க்கிழமை குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல தனது நண்பரின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு பரதராமிக்கு வந்துள்ளார்.

    பரதராமியில் உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். குடியாத்தம் அடுத்த ராமாலை கிராமம் அருகே வரும்போது மகேசை தடுத்து நிறுத்திபோலீஸ் எனக்கூறி ஒருவர் குடியாத்தம் அழைத்து வந்து சிலருடன் சேர்ந்து கஞ்சா வழக்கு போட்டு விடுவதாக மிரட்டி மோட்டார் சைக்கிள் செல்போன் 1500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மேலும் 30 ஆயிரம் கொண்டு வந்து தருமாறும் இல்லை என்றால் கஞ்சா வழக்கு போட்டு விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

    இதனையடுத்து காமேஷ் உறவினர்களுக்கு தெரிவித்து அவர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து விசாரித்த போது நாங்கள் யாரும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யவில்லை என தெரிவித்தனர்.

    அப்போது போலீஸ் என கூறி காமேசை ஏமாற்றி மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காமேஷ் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன்,சிலம்பரசன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது தனிப்படை யினருக்கு போலீஸ் என மிரட்டி பறித்து சென்ற மோட்டார் சைக்கிளுடன் இருவர் குடியாத்தம் சித்தூர் கேட்பகுதியில் வந்து கொண்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பறித்து சென்ற மோட்டார் சைக்கிளில் இருவர் வந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி சீனிவாசன் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர்

    தான் கடந்த செவ்வாய்க்கிழமை ராமாலை அருகே மகேசை மடக்கி திருட்டு மோட்டார் சைக்கிள் என கூறியது தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒருவர் மாதனூரைச் சேர்ந்த கிரி (22), மோகன்குமார் (27) என தெரியவந்தது.

    இதில் மோகன்குமார் போலீஸ் என கூறியதும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த உள்ளி மேம்பாலம் அருகே கார் மோட்டார் சைக்கிள் மோதிய சம்பவத்தில் தம்பதியை பட்டாக்கத்தி காட்டி மிரட்டிய சம்பவத்தில் குடியாத்தம் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்பு ஜெயிலிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.

    அந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை விற்பதற்காகவும் அதனை விற்க மனோஜை உடன் அழைத்துச் செல்ல வந்த போது போலீசாரிடம் பிடிபட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் 1500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்ற கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×