என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி விற்ற 2 பேர் கைது
- ஏராள மான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
- போலீசார் சோதனையில் சிக்கினர்
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தொடர் புகார்களின் பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் நேற்று குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 36) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்தனர்.
இதேபோல் தரணம்பேட்டை பகுதியில் பாபு (62) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருக்கும் போது போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து ஏராள மான லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story