என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொழிற்சாலையில் இரும்பு திருடிய 2 பேர் கைது
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் மலைக்கோடியில் அரசு நூற்பாலை உள்ளது. மூடப்பட்ட இந்த தொழிற்சாலையில் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு அங்குள்ள பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அணைக்கட்டு அருகே உள்ள கலங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த காவலாளி கணபதி என்பவர் 2 நாட்களுக்கு முன்பு பணியில் இருந்தார்.
அப்போது தொழிற்சாலையில் புகுந்த 2 பேர் அங்கிருந்த இரும்பு தகடுகள் மற்றும் கம்பிகளை திருடி சென்றனர்.
அவர்களை காவலாளி கணபதி விரட்டிச் சென்றார். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்புக்கம்பி திருடியவர்களை தேடி வந்ததனர்.
இந்த நிலையில் தொழிற்சாலையில் இரும்பு கம்பிகளை திருடியது அரியூர் மலைக்கோடி நம்பிராஜபுரத்தைச் சேர்ந்த சுதாகர் (வயது 25) ராஜாராம் (28) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்