என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் யூனியன் சிறப்பு கூட்டம்
    X

    சிறப்பு கூட்டம் நடைபெற்ற காட்சி.


    வாசுதேவநல்லூர் யூனியன் சிறப்பு கூட்டம்

    • ஒன்றிய குழு தலைவருக்கு புதிய வாகனம் கொள்முதல் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110 -இன் கீழ் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஒன்றிய குழு தலைவருக்கு புதிய வாகனம் கொள்முதல் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், ஆணையாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக மேலாளர் கருத்தப்பாண்டி, உதவியாளர் சிலம்பரசன், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×