என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
சாத்தான்குளம் புளியடி தேவி மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேகம்
- சாத்தான்குளம் புளியடி தேவிஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா 2 நாள்கள் நடைபெற்றது.
- அம்மாள் அலங்கார சப்ப ரத்தில் எழுந்தருளி பிரகார வீதி உலா வந்தார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் புளியடி தேவிஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா 2 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை கணபதி ஹோமம், மாலை முதல்கால யாக வேள்வி பூஜை, 2-ம் நாள் தர்மபெருமாள் யாக வேள்வி வருஷாபிஷேகம், தொடர்ந்து புளியடி தேவிஸ்ரீமாரியம்மன் சிறப்பு அபிஷேகம், கோபுர கலசம், தேவி ஸ்ரீமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து அம்மாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. அம்மாள் அலங்கார சப்ப ரத்தில் எழுந்தருளி பிரகார வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story






