என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வானமுட்டி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
- ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் சங்கு சக்ர கதா அபய கஸ்தத்துடன் பிப்பல மகரிஷிக்கு காட்சி.
- புனிதநீர் கடத்தில் எடுத்து யானை மீது வைத்து ஒட்டகம், குதிரை ஊர்வலத்துடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே சோழன்பேட்டை கோழிகுத்தி கிராமத்தில் தயாலட்சுமி சமேத வானமுட்டி பெருமாள் என்கிற சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.
ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் சங்கு சக்ர கதா அபய கஸ்தத்துடன் பிப்பல மகரிஷிக்கு காட்சி தந்த வண்ணம் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.
இக்கோவிலில் பிதுர்தோஷம், ஹத்திதோ ஷம், சனிதோஷமும் சர்வ வியாதி நிர்வத்தி செய்வதோடு கோடி பாபங்களையும் விமோச னமாக்கும் கோடி ஹத்தி பாபவிமோசனபுரம் என்ற கோழிகுத்தி கிராமத்தில் வைகானச பகவத் சாஸ்திர முறையில் பூஜித்து வருபவரான வானமுட்டி பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோவல் திருப்பணி வேலைகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையொட்டி 5ம் தேதி காலை காவிரிக்கரையில் இருந்து யாகசாலைக்காக புனிதநீர் கடத்தில் எடுத்து யானை மீது வைத்து ஒட்டகம், குதிரை ஊர்வலத்துடன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு பூர்வாங்க பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
6ம் காலயாக சாலை பூஜையின்போது திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு மற்றும் பிரசாதங்கள் யாகசாலையில் பெருமா ளுக்கு சாற்றப்பட்டு பூர்ணா ஹுதி செய்யப்ப ட்டது.
நேற்றுகாலை 8ம் காலயாகசாலை பூஜைகள் தொடங்கி பூர்ணாஹுதி ஆகி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து விமானத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி மகாகும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர் மூலவர் மகாசம்ரோஷணம், திருவாராதனம், சாற்று முறை, இரவு பெருமாள் வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை தொழி லதிபர் விஜயகுமார் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்