search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதையில் பாலத்தில் அமர்ந்திருந்த வாலிபர் பள்ளத்தில் தவறி விழுந்து சாவு
    X

    குடிபோதையில் பாலத்தில் அமர்ந்திருந்த வாலிபர் பள்ளத்தில் தவறி விழுந்து சாவு

    குடிபோதையில் பாலத்தில் அமர்ந்திருந்த வாலிபர் பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூரைச் சேர்ந்தவர் மணி.இவரது மகன் பாபு(33) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2-ந் தேதி மது அருந்தி விட்டு சின்னமருதூரில் உள்ள ஒரு பாலத்தின் மீது அமர்திருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் பின்னால் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார்.இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கலில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு‌ சிகிச்சை பெற்று வந்த பாபு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×