என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தென்னம்புலம் மழை மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மழை மாரியம்மன்.

    தென்னம்புலம் மழை மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அம்பாளுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கரகம், காவடி ஆட்டம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தென்னம்புலம் மழை மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாள் சிம்ம, கிளி, அன்னபச்சி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று தென்னம்புலம் கருப்பங்காடு பகுதி சார்பில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, பின் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்பு, புலி வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

    தொடர்ந்து, கரகம், காவடி ஆட்டம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. நிகழ்ச்சியை கருப்பங்காடு கிராமமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×