search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மேலவீதி விஜயராமர் கோவிலில் வைகாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X

    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவர்கள்.

    தஞ்சை மேலவீதி விஜயராமர் கோவிலில் வைகாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

    • காலை 8 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும்.
    • வருகிற 22-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள விஜயராமர் கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ராமநவமி , வைகுண்ட ஏகாதசி , புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜய ராமரை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பிரமோற்சவம் 9 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு இன்று (செவ்வாய்கிழமை) முதல் வரும் 24-ம்தேதி வரை வைகாசி பிரமோற்சவம் விழா நடைபெறுகிறது.

    வைகாசி பிரமோற்சவம் விழாவை முன்னிட்டு முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    வைகாசி பிரமோற்சவம் நடைபெறும் நாட்களில் காலை 8 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறும். மாலை 6.30மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நான்கு ராஜ வீதிகளிலும் நடைபெறும்.

    இன்று அன்னப் பட்சி வாகனமும், நாளை சிம்ம வாகனம், 18-ம்தேதி அனுமந்த வாகனம், 19-ம்தேதி சேஷ வாகனம், 20-ம்தேதி கருட சேவையும். 21-ம்தேதி யானை வாகனமும், 22-ம்தேதி திருக்கல்யா ணமும் , 23-ம்தேதி குதிரை வாகனமும் ,24-ம்தேதி திருத்தேரும் நடைபெறுகிறது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் உபயதா ரர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×