என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மூலை அனுமார் கோவிலில் நாளை வைகாசி அமாவாசை சிறப்பு வழிபாடு
    X

    தஞ்சை மூலை அனுமார் கோவிலில் நாளை வைகாசி அமாவாசை சிறப்பு வழிபாடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 9 நவதானியங்களால் மூலை அனுமாருக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
    • வைகாசி அமாவாசை அன்று ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது.

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.

    சேதுபாவா சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலை அனுமார் வாலில் சனீஸ்வரன் பகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    இக்கோவில் வாஸ்து தோஷம் மற்றும் நவக்கிர தோஷ பரிகாரம் ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு பக்தர்கள் அமாவாசை தோறும் 18 அகல் தீபமேற்றி 18 வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் நாளை ( வெள்ளிக்கிழமை) வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு இலட்ச ராம நாமம் ஜெபம் நடைபெறும்.

    தொடர்ந்து காலை10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம் , சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு நவக்கிரக தோஷம் நீங்க வேண்டி சம்பா கோதுமை,கொள்ளு, துவரை, மொச்சை, கொண்டகடலை,

    பயிறு, எள், காரமணி, கருப்பு உளுந்து போன்ற ஒன்பது நவதானியங்களால் மூலை அனுமாருக்கு சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் அதையடுத்து 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி வழிபாடு நடைபெறுகிறது.

    வைகாசி அமாவாசை அன்று ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பாகும்.

    அமாவாசை அன்று பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு நவதானியங்களை வாங்கி வந்து மூலை அனுமாருக்கு படைத்து அதனை திரும்ப பெற்று வீட்டிற்கு எடுத்துச் சென்று நவதானியங்களை இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை வடிகட்டி வெல்லம் சேர்த்து பசுமாட்டிற்கு கொடுத்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    இந்த வழிபாட்டை ஏராளமான பக்தர்கள் மேற்கொள்ள வருவது குறிப்பிடத்தக்கது.

    இவ்வழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×