என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூடுதல் தண்ணீர் திறப்பால் தொடர்ந்து சரிந்து வரும் வைகை அணை நீர்மட்டம்
- மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.
- கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து 68.44 அடியாக உள்ளது. 705 கனஅடிநீர் வருகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை 71 அடி உயரம் கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியது. அதனைதொடர்ந்து பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவிலேயே நீடித்து வந்தது.
தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1819 கனஅடிநீர் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது. கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து 68.44 அடியாக உள்ளது. 705 கனஅடிநீர் வருகிறது.
முல்ைலபெரியாறு அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. 525 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 76 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.35 அடியாக உள்ளது. 42 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்