search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகரில் ரூ.1.25 லட்சம் மதிப்பில் 5 இடங்களில் நகர்நல மையம் அடிக்கல் நாட்டு விழா
    X

    மேலப்பாளையத்தில் நகர்நல மையம் அமைக்க அப்துல் வகாப் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டிய காட்சி.

    நெல்லை மாநகரில் ரூ.1.25 லட்சம் மதிப்பில் 5 இடங்களில் நகர்நல மையம் அடிக்கல் நாட்டு விழா

    • மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
    • பாளையில் 4 இடங்களில் புதிதாக நகர்நல மையம் அமைக்கப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் 5 இடங்களில் புதிதாக நகர்நல மையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

    மேலப்பாளையம் கொடிமரம் பகுதியில் நடந்த விழாவில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் அய்யப்பன், சுகாதார அலுவலர் சாகுல்கமீது, கவுன்சிலர் ரம்ஜான் அலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பாளை ஆரோக்கியநாதபுரம், வி.எம்.சத்திரம், சாந்திநகர், இந்திராநகர் ஆகிய இடங்களிலும் புதிதாக நகர்நல மையம் அமைக்க அப்துல் வகாப் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

    Next Story
    ×