என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் நாளை மறுநாள் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு
    X

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் நாளை மறுநாள் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு

    • தமிழக மின்சார வாரியம் எடுத்துள்ள முடிவு பொதுமக்களையும், வணிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
    • பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் காத்திடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக மின்சார வாரியம் எடுத்துள்ள முடிவு பொதுமக்களையும், வணிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மின்சார மீட்டருக்கு மாத வாடகை வசூலிக்க தமிழக மின்சார வாரியம் எடுத்துள்ள முடிவு பொதுமக்களையும், வணிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தற்போது ஒருமுனை (சிங்கிள் பேஸ்) போர்டுகளுக்கு ரூபாய் 300-ம் மும்முனை இணைப்புக்கு ரூ.720-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதையும் அதிகப்படுத்திட மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நடவடிக்கைகள் ஏற்கனவே நிதிச்சுமையில் உள்ள வணிகர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதோடு, வணிகத்தை விட்டு வெளியேறும் நிலைமை உருவாகிவிடக்கூடாது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, மின்மீட்டர் வாடகை, மின் இணைப்பு சாதனங்களுக்கு கூடுதல் கட்டணம் போன்றவற்றை தவிர்த்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் காத்திடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், ஜி.எஸ்.டி துறையில் அமலாக்கத்துறை அனுமதிக்ககூடாது என்பதை வலியுறுத்தியும், அதிகபட்ச 28 சதவிகித வரியை குறைக்க வலியுத்தியும் தென்மண்டலம் சார்பாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா கர்நாடகா உள்ளிட்ட வணிக நிர்வாகிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை வருகின்ற ஆகஸ்ட் 5-ந் தேதி அன்று சந்தித்து முறையிட இருக்கின்றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×