search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் தொழிற்சங்கம்சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் பேசியபோது எடுத்த படம்.

    ஓசூரில் தொழிற்சங்கம்சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • கிருஷ்ணகிரி மாவட்ட எப்.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், ஓசூரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஓசூர் ராம் நகர் அண்ணாசிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட குழு உறுப்பினர் மாதையன் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    ஓசூரில் உள்ள ஆம் ஸ்டீல் என்ற தனியார் தொழிற்சாலை, சட்டப்படி பணி ஓய்வுபெற்றவர்களுக்கு, சட்டவிரோதமாக வேலை வழங்குவதை அதிகாரிகள் அனுமதிப்பதை கண்டித்தும், தமிழக அரசு தலையிட்டு சட்டமீறல்களை தடுத்து தொழிலாளிகளை பாதுகாக்க கோரியும், கிருஷ்ணகிரி மாவட்ட எப்.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், ஓசூரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம் நகர் அண்ணாசிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட குழு உறுப்பினர் மாதையன் தலைமை தாங்கினார். கண்ணன், மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், மாநில பொதுச்செயலாளர் எஸ்.சுந்தரம் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் வைத்தி, மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி உள்பட பலர் பேசினர். இதில், மாவட்ட, மாநகர, தொகுதி நிர்வாகிகள், பல்வேறு நிறுவனங்களின் எப்.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்டக்குழு உறுப்பினர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×