search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பனார்கோவிலில், ஒன்றிய குழு கூட்டம்
    X

    கூட்டத்தில் தலைவர் நந்தினிஸ்ரீதர் பேசினார்.

    செம்பனார்கோவிலில், ஒன்றிய குழு கூட்டம்

    • இலுப்பூர் ஊராட்சி வடக்கு தெருவில் உள்ள பாலம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சேதமடைந்துள்ளது.
    • முடிகண்ட–நல்லூரில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்து தர வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசிய விவரம் வருமாறு.

    சுப்பிரமணியன்:-

    கஞ்சாநகரம் கிராமத்தில் கல்வெட்டை சீரமைக்க வேண்டும். மங்கனூர் கிராமத்தில் கடந்த 1997- 98 ம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

    தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளையும் ஆய்வு செய்து வடிகால் வசதி, சாலை சீரமைப்பு போன்ற அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும்.

    தேவிகா:-

    இலுப்பூர் ஊராட்சியில் வடக்கு தெருவில் உள்ள பாலம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சேதமடைந்து உள்ளது.

    அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லும்போது பாலம் உடைந்து சேதம் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    எனவே உடைந்த பாலத்தை உடனே சீரமைத்து தர வேண்டும்.

    ராணி:-

    திருச்சம்பள்ளி வண்ணாங்குளம் படித்துறையை சீரமைக்க வேண்டும். முடிகண்டநல்லூரில் அங்கன்வாடி அமைப்பதற்கான இடம் உள்ளது.

    அங்கு அங்கன்வாடி அமைத்து தர வேண்டும்.

    இதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், செம்பனார்–கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சாலை வசதி மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நேரில் சென்று பார்வையிட்டு நிறைவேற்றப்படும்.

    மேலும் தற்போது மழைக்காலமாக இருப்பதால் சரியாக வடிகால் வசதி இல்லாத ஊராட்சிகளில் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இவ்வாறு விவாதம் நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் பொறியா ளர்கள் முத்து, சோமு, மாவட்ட கவுன்சிலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொன்டனர். நிகழ்ச்சியின் முடிவில் இடைநிலை அலுவலர் முருகன் நன்றி கூறினர்.

    Next Story
    ×