search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்பெண்ணையாற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
    X

    தென்பெண்ணையாற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

    • சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் இறந்த நிலையில் ஒருவரின் பிணம் இருந்தது.
    • அதிக குடிபோதையில் இறந்திருக்கலாம்.

    கடலூர்:

    புதுவை மாநிலம் பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் இறந்த நிலையில் ஒருவரின் பிணம் இருந்தது. இத்தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவருக்கு 50 வயது இருக்கலாம் என்றும், அதிக குடிபோதையில் இறந்திருக்கலாம் எனவும் தெரியவருகிறது. இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×