என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிணமாக கிடந்தவர்.
சேலத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் மீட்பு
- சேலத்தில் 2 இடங்களில் ஆண் பிணங்கள் மீட்கப்பட்டன.
- பிணமாக கிடந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சேலம்:
சேலம் டவுன் பஸ் நிலையத்துக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இது பற்றி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து இடத்தை கைப்பற்றி பிரேத சோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் கம்பி வேலி அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடல் அழுகி காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த முதியவர் பெயர் மற்றும் ஊர் விபரங்கள் குறித்து விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது பற்றி பெரியேரி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த முதியவர் பற்றி தகவல் கிடைத்தால் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.






