என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமி உள்பட 2 பெண்கள் மாயம்
- புவனேஸ்வரி கணவரை பிரிந்து மகனுடன் த.அய்யம்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார்.
- பள்ளியில் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கடத்தூரைச் சேர்ந்தவர் மணிராஜா. இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு த.அய்யம்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரி (வயது27) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் மணிராஜாவுக்கும்-புவனேஸ்வரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரி கணவரை பிரிந்து மகனுடன் த.அய்யம்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். புவனேஸ்வரி நேற்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர், நீண்டநேரமாகி–யும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிப்போன அவரது தாயார் சாந்தா தனது மகளை உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சாந்தா கடத்தூர் போலீஸ் நிலை–யத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான புவனேஸ்வரியை தேடிவருகின்றனர். அதேபோல் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மோட்டுபட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த இளம் பெண் கடந்த 3-ந் தேதி காணாமல் போனதை அறிந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுமியின் தந்தை பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






