என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் 2 பேர் கைது
    X

    மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோட்டார் சைக்கிள் திருடும் நபர்களை பிடிப்பதற்காக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
    • கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடிக்கடி வீடுகளில் நிறுத்தி வைக்கப்படும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடும் நபர்களை பிடிப்பதற்காக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள் திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மறைமலைநகர் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 22), விஜய் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    Next Story
    ×