என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு அருகே மதுபானம் விற்ற  2 பேர் கைது
    X

    பாலக்கோடு அருகே மதுபானம் விற்ற 2 பேர் கைது

    • மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் 70 குவாட்டர் மற்றும் பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக அரசு மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து நேற்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலக்கோடு அண்ணாநகரில் வீட்டில் வைத்து மதுபானங்களை ராஜாராமன் (வயது 26) என்பவர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தார்.

    அதேபோல் காவாப்பட்டியை சேர்ந்த மீனா (53), கணபதிகொட்டாய் பகுதியை சேர்ந்த சாவித்திரி (60) ஆகியோர் வீட்டில் வைத்து மது விற்பனை செய்து வந்தனர்.

    உடனடியாக அவர்கள் 3 பேரையும் கைது செய்த பாலக்கோடு போலீசார் அவர்களிடமிருந்து 70 குவாட்டர் மற்றும் பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×