search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 மாதங்களுக்கு பிறகு சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு - தொழிலாளர்கள் மகிழ்ச்சி
    X

    கோப்புபடம்

    3 மாதங்களுக்கு பிறகு சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு - தொழிலாளர்கள் மகிழ்ச்சி

    • பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் 25 சதவீத கூலி உயர்வு வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்
    • பாத்திர தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

    திருப்பூர்:

    பித்தளை மற்றும் காப்பர் பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு 22.5 சதவீதம் சம்பள உயர்வு வழங்க உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டதைஅடுத்து, பாத்திர தொழிலாளர்களுக்கான சம்பளப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இது தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் பித்தளை மற்றும் காப்பர் பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை அனுப்பர்பாளையம் பாத்திர உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் நடந்தது. தொழிற்சங்க தரப்பில், வேலுச்சாமி (எல்.பி.எப்.,), ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.,), தேவராஜ் (ஏ.டி.பி.,), நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.,), அப்புக்குட்டி (எச்.எம்.எஸ்.,), அசோக்குமார் (ஐ.என்.டி.யு.சி.,), சீனிவாசன் (பி.எம்.எஸ்.,), அர்ஜூனன் (காமாட்சியம்மன் சங்கம்) ஆகியோரும், உற்பத்தியாளர் சங்கம் தரப்பில் துணை தலைவர் மனோகர், செயலாளர் முத்தையா, பொருளாளர் குமார், துணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் 25 சதவீத கூலி உயர்வு வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். உற்பத்தியாளர் சங்கத்தினர் 22.5 சதவீதம் கூலி உயர்வு வழங்குவதாக கூறினர். தொழிற்சங்கத்தினர் ஏற்க மறுத்தனர். உற்பத்தியாளர் சங்கத்தினர் இதற்கு மேல் தர முடியாது என கூறவே 22.5 சதவீதத்தை தொழிற்சங்கத்தினர் ஏற்று கொண்டனர்.

    பாத்திர தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது. புதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கத்தினர் உற்பத்தியாளர் சங்கத்துடன்3 மாதமாக நடத்திய பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வந்தது.இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் சப் கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எவர் சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு முடிவுக்கு வந்தது.

    அதுபோல் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் பித்தளை மற்றும் காப்பர் பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வில் தீர்வு ஏற்பட்டது. கூலி உயர்வு முடிவுக்கு வந்ததையொட்டி பாத்திர தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.புதிய கூலி உயர்வு தொடர்–பான ஒப்–பந்–தம் நாளை மறு–நாள் (புதன்–கி–ழமை) கையெழுத்தாக உள்ளது. மேலும் இந்த கூலி உயர்வு கடந்த 1.1.2023 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×